திடீரென அடி ஆட்களுடன் திவ்யா வீட்டிற்கு சென்ற அர்னவ் - பரபரப்பு சம்பவம்!

செவ்வாய், 13 ஜூன் 2023 (18:46 IST)
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கேளடி கண்மணி என்ற சீரியல் சீரியலில் நடித்துப் பிரபலமானவர் திவ்யா. இவர் அதே சீரியலின் ஹீரோவான அர்னவ்வை காதலித்து திருமணம் செய்யாமலே கர்ப்பம் ஆனார். அதன் பின்னர் இருக்கும் பயங்கர சண்டை ஏற்பட்டது. 
 
திவ்யா தன் கணவர் அர்ணவ் தன்னை அடித்துத் துன்புறுத்துவதால், தன் கரு எப்போது வேண்டுமானாலும் கலையலாம் என ஒரு வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். அதன் பின்னர் 3 மாதக் கருவைக் கலைக்க  நடிகை திவ்யா ஸ்ரீதர் முயற்சி செய்வதாக கணவர் அர்னவ் போலீஸில் புகாரளித்தார். 
 
பின்னர் அர்னவ் வேறு நடிகையுடன் ரகசிய உறவில் இருப்பதாகவும், அதனால் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் கூறி ஆதாரத்தை வெளியிட்டார். இதனால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பின்னர் அர்னவ்வின் குழந்தையை திவ்யா பெற்றெடுத்தார். இந்நிலையில் அரனவ் திடீரென பவுன்சர்கள் மற்றும் வழக்கறிஞருடன் திவ்யா வீட்டிற்கு சென்று சத்தம் போட்டுள்ளார். திவ்ய கதவை திறக்காமல் இங்கே எதற்கு வந்தீர்கள், உங்களுக்கு இந்த வீட்டிற்குள் வர எந்த உரிமையும் இல்லை.
போலீஸை அழைத்துள்ளேன் அவர்களிடம் பேசுங்கள் என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்