மக்கள் பணியாற்ற வந்த தைரியமான முதல் மனிதன்- விஜயை பாராட்டிய சமுத்திரகனி

Sinoj

சனி, 3 பிப்ரவரி 2024 (18:58 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் நேற்று  தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது புதிய அரசியல் கட்சியை அறிவித்து தனது அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

அதில், 2024 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும், வரும் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் தான் தங்கள் இலக்கு என்று தெரிவித்திருந்தார்.

விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அவரது புதிய கட்சி பற்றி அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்,  நடிகர் விஜய்யின் புதிய அரசியல் கட்சி மற்றும் அவரது அரசியல் வருகை பற்றி நடிகரும் இயக்குனருமான சமுத்திரகனி கருத்துதெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் வலைதள பக்கத்தில், 

‘’திரைத்துறையில் உச்சத்தின் உச்சத்தில் இருக்கும்போது மக்கள் பணியாற்ற வந்த தைரியமான முதல் மனிதன். பிரபஞ்சம் உம்மை வெல்லச் செய்யட்டும். உன் கனவுகள் மெய்ப்படட்டும். வாழ்த்துகள் சகோதரா’’ என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்