மாடு மேய்த்துக்கொண்டு அடுப்படியில் கிடக்கும் சமந்தா...

செவ்வாய், 12 டிசம்பர் 2017 (16:58 IST)
நடிகைகளுக்கு திருமணம் ஆனாலே நடிப்புக்கு முழுக்கு போட்டு விடுவார்கள். ஆனால், முன்னணி நடிகையாக இருக்கும்போதே திருமணம் செய்து கொண்டார் சமந்தா.
 
திருமணத்துக்கு முன்பு ஹீரோயினாக நடித்த மாதிரியே திருமணத்துக்கு பின்பும் நடித்து வருகிறார் சமந்தா. திருமணத்திற்கு பின்னும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கலக்கி வரும் ஹீரோயின் இவர். 
 
தர்போது தமிழில், சிவகார்த்திகேயன் மற்றும் விஷாலுடன் நடித்து வருகிறார். அதேபோல் தெலுங்கிலும் கைவசம் சில படங்களை வைத்துள்ளார். ராம் சரணுக்கு ஜோடியாக ரங்குஸ்தளம் என்ற கிராமத்து படத்தில் நடித்து வருகின்றார்.
 
இதில் சமந்தா மாடு மேய்க்கும்படியும், வீட்டு வேலை செய்வது போலவும் ஒரு சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதுவரை திரையில் அழகாக தோன்றும் சமந்தாவை பார்த்துள்ள ரசிகர்களுக்கு இந்த புகைப்படங்கள் அதிர்ச்சியை அளித்துள்ளது. 
 
திருமணத்துக்கு பின்பு நல்ல கதைகளில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்றும், என்னுடைய முழுமையான நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் படங்களில் நடிக்க விரும்புகிறேன் என்றும் கூறிய சமந்தாவிற்கு இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுத்தரும் என டோலிவுட்டில் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்