சல்மான் கான் பட முதல் கட்ட ஷூட்டிங்கை முடித்த ஏ ஆர் முருகதாஸ்!

vinoth

புதன், 3 ஜூலை 2024 (10:01 IST)
ஏ ஆர் முருகதாஸ், இப்போது சிவகார்த்திகேயனை ஒரு படத்தை இயக்கி வருகிறார். இன்னும் இந்த படத்தின் பெயர் அறிவிக்கப்படவில்லை. இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக சென்னையில் நடைபெற்று வந்தது. படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்துக்கு இடையிலேயே முருகதாஸ் அடுத்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான சல்மான் கானோடு இணைந்து சிக்கந்தர் என்ற படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படத்தின் பட்ஜெட் 400 கோடி ரூபாய்க்கு மேல் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் வில்லனாக நடிக்க சத்யராஜும், கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவும் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் மும்பையில் கடந்த வாரம் தொடங்கியது. இந்நிலையில் நேற்று முதல் கட்ட ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. அடுத்த கட்ட ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் மும்பையில் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில், அதற்காக பிரம்மாண்ட செட் அமைக்கும் பணிகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்