நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ் நடிகை!

செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (08:24 IST)
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் நடிகை ஒருவர் குரல் கொடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நடத்தப்படும் நீட் தேர்வை தமிழகம் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என்பதும் தமிழக அரசியல்வாதிகள் இதற்காக போராட்டம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நீட் தேர்வு குறித்து ஏற்கனவே பல சினிமாத்துறையினர் கருத்து தெரிவித்த நிலையில் தற்போது தமிழ் நடிகை சாய் பல்லவி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். நீட் தேர்வு என்பது அவசியமற்றது என்றும் மருத்துவ படிப்பு என்பது கடல் போன்றது என்றும் அந்த படிப்பு நுழைவுத் தேர்வு மூலம் அனுமதிப்பது மாணவர்களை மனதளவில் பாதிக்க வைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
இந்த விவகாரத்தில் நீட் தேர்வு வேண்டாம் என்று கூறுபவர்கள் பக்கமே நான் இருப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்