சதுரங்க வேட்டை 2 படத்தின் சிக்கல் தீர்ந்தது…. அரவிந்த் சுவாமி சமாதானம்!

திங்கள், 6 டிசம்பர் 2021 (18:49 IST)
அரவிந்த் சுவாமி மற்றும் திரிஷா நடிப்பில் உருவாகிய சதுரங்க வேட்டை 2 திரைப்படம் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக பெட்டியில் முடங்கியது.

தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி இயக்குனராக இருக்கும் ஹெச் வினோத் முதன் முதலில் இயக்கிய திரைப்படம் சதுரங்க வேட்டை. அப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அதன் இரண்டாம் பாகத்துக்காக கதை, திரைக்கதை மற்றும் வசனத்தை அவர் எழுதிக் கொடுத்தார். அந்த படத்தில் அரவிந்த் சாமி கதாநாயகனாகவும், ஹீரோயினாக த்ரிஷாவும் நடித்துள்ளார். ‘சலீம்’ படத்தை இயக்கிய நிர்மல் குமார் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார். மனோபாலா தயாரித்துள்ள இந்தப் படம் முடிந்து ஒரு வருடத்துக்கு மேலாகிறது.

ஆனால் கதாநாயகன் அரவிந்த் சுவாமியின் சம்பள பாக்கி விவகாரம் இருந்ததால் படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை. இந்நிலையில் இப்போது முன்னணி விநியோகஸ்தர் ஒருவர் மூலமாக அரவிந்த் சுவாமிக்கு முழு சம்பளமும் கொடுக்கப்பட்டு விட்டதாகவும், அதனால் அவர் டப்பிங் பேச சம்மதித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் சதுரங்க வேட்டை திரைப்படம் வெகுவிரைவில் திரைகளைக் காணும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்