பெருமாள் பிச்சையின் 29வது நினைவு தினத்தை கொண்டாடிய 'சாமி 2' படக்குழுவினர்

வியாழன், 28 டிசம்பர் 2017 (00:46 IST)
ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா நடிப்பில் கடந்த 2003ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றிப்படம் சாமி. இந்த படத்தின் வில்லன் பெருமாள்சாமி கேரக்டரில் கோட்டா சீனிவாசராவ் நடித்திருந்தார். இந்த படத்தின் கிளைமாக்ஸில் அவரது கேரக்டர் விக்ரமால் கொல்லப்பட்டுவிடும்

இந்த நிலையில் காரைக்குடியில் தற்போது நடைபெற்று வரும் 'சாமி 2' படப்பிடிப்பில் பெருமாள்சாமிக்கு மூன்று பையன்கள் இருப்பதாகவும், அவரது 29வது நினைவு தினத்தை அவர்கள் அனுசரிப்பது போன்றும் ஒரு காட்சி படமாக்கப்பட்டது. இந்த காட்சிக்காக பெருமாள் பிச்சைக்கு ஒரு பெரிய கட் அவுட் வைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான ஜூனியர் ஆர்ட்டிஸ்டூகள் கலந்து கொண்ட இந்த காட்சியின் படப்பிடிப்பு ஒரு அரசியல் விழா போல் நடந்தது

விக்ரம், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இந்தப் படத்தில், பாபி சிம்ஹா வில்லனாக நடிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். 'இருமுகன்' படத்தை தயாரித்த ஷிபுதமீன்ஸ் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்