விக்ரம் படத்தில் இருந்து திடீரென விலகிய த்ரிஷா: அதிர்ச்சி தகவல்

திங்கள், 23 அக்டோபர் 2017 (15:36 IST)
சீயான் விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கி வரும் 'சாமி 2' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் திடீரென இந்த படத்தின் நாயகிகளில் ஒருவரான த்ரிஷா விலகிவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை த்ரிஷா தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.



 
 
படக்குழுவினர்களுக்கும் தனக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த படத்தில் இருந்து தான் விலகுவதாக த்ரிஷா தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்துள்ளார். கீர்த்திசுரேஷ் கேரக்டரை விட த்ரிஷாவின் கேரக்டர் டம்மியாக இருந்ததால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
 
இருப்பினும் த்ரிஷாவின் இந்த முடிவுக்கு அவரது ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். புவனா மாமி கேரக்டரில் உங்களை தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது என்றும், உங்கள் முடிவை நீங்கள் மாற்றி கொள்ள வேண்டும் என்றும் கமெண்டில் கூறி வருகின்றனர். த்ரிஷாவின் முடிவு மாறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்