ஷங்கருக்கே இந்த நிலைமையா? தெலுங்கு பக்கம் கரையொதுங்கியது இதனால்தானா?

சனி, 13 பிப்ரவரி 2021 (10:21 IST)
இயக்குனர் ஷங்கர் முதல் முதலாக ஒரு நேரடி தெலுங்கு படம் இயக்க உள்ளார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி வந்த ஷங்கர் இப்போது வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் என்ற நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாக இருக்கும் ஐம்பதாவது திரைப்படத்தில் ராம் சரண் தேஜா ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படம் அவரது 15 ஆவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக அறியப்பட்ட ஷங்கர் இப்போது தேய் திசையில் இருக்கிறார். கடைசியாக அவர் இயக்கிய ஐ, 2.0 ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தன. தற்போது அவர் இயக்கி வந்த இந்தியன் 2 திரைப்படமும் நீண்ட காலமாக இழுபறியில் இருந்தது. இதனால் அடுத்த படத்துக்கான வேலைகளில் அவர் இறங்கினார். தமிழில் அவர் சொல்லும் பட்ஜெட்டில் இப்போது படமெடுப்பது ரிஸ்க் என்று பல தயாரிப்பாளர்கள் நினைக்கிறார்களாம். அதனால் ஷங்கர் தெலுங்கு சினிமாவுக்கு செல்லும் முடிவில் இறங்கினாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்