புஷ்பா 2 படத்தில் என் கதாபாத்திரத்துக்கு பொறுப்பு அதிகமாகிவிட்டது – ராஷ்மிகா அப்டேட்!

vinoth

செவ்வாய், 5 மார்ச் 2024 (10:58 IST)
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்தியா முழுவதும் ஒரு பிராண்ட்டாக மாறியது புஷ்பா 2 திரைப்படம். இந்நிலையில் அதன் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. அதன் படப்பிடிப்பு பல வெளிநாடுகளில் நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டாம் பாகத்தை சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முக்கியமான சில காட்சிகளை படமாக்க இப்போது ஜப்பானில் முகாமிட்டுள்ளது படக்குழு. இந்நிலையில் அங்கே படம் பற்றி பேசியுள்ள படத்தின் நாயகி ராஷ்மிகா “முதல் பாகத்தை விட இது பெரிய படமாக இருக்கும். படத்தின் பாதிக் காட்சிகள் படமாகப்பட்டு விட்டன. ஒரு பாடல் காட்சியும் படமாக்கப்பட்டு விட்டது. முதல் பாகத்தில் என் கதாபாத்திரம் புஷ்பாவின் மனைவி ஆகிவிட்டதால்  அதற்கான பொறுப்பு இரண்டாம் பாகத்தில் கூடியுள்ளது. இந்தியாவில் வெளியாகும் அதே நாளில் ஜப்பானிலும் இந்த படம் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்