ராஷ்மிகா நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு அறிவிப்பு

செவ்வாய், 24 அக்டோபர் 2023 (07:05 IST)
இப்போது இந்திய அளவில் பிரபலமான நடிகையாக ராஷ்மிகா இருந்தாலும், அவரின் சினிமா வாழ்க்கை தொடங்கியது கன்னட சினிமாவில்தான். அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகையாக மாறியுள்ள அவரை ரசிகர்கள் செல்லமாக நேஷனல் க்ரஷ் என அழைத்து வருகின்றனர்.

இப்போது அவர் பாலிவுட்டில் அனிமல், தெலுங்கில் புஷ்பா 2, தமிழில் ரெயின்போ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் தெலுங்கில் அடுத்து நடிக்கவுள்ள படத்தை ராகுல் ரவீந்திரன் இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்த நிலையில் அவர் உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக விலகிவிடவே ராஷ்மிகா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை ஜிஏ2 பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிகிறது.

இந்த படத்துக்கு தி கேர்ள்ப்ரண்ட் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதை நேற்று ராஷ்மிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். இயக்குனர் ராகுல் ரவீந்தரன் தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பிரபல பாடகி சின்மயியின் கணவர் என்பது குறிப்பிடத்தகக்து. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்