தலயே சொன்னபின்னர்தான் அது நடந்தது – சீக்ரெட்டை உடைத்த பாண்டே !

செவ்வாய், 10 மார்ச் 2020 (10:13 IST)
தல நடிப்பில் உருவான நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த போது நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை ரங்கராஜ் பாண்டே பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஊடகவியலாளரான ரங்கராஜ் பாண்டே திடீரென அங்கிருந்து வெளியேறினார். அதன் பின் யாரும் எதிர்பாராத விதமாக அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் வழக்கறிஞராக முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்தார். ஊடகங்களில் கலக்கிய அவருக்கு நடிப்பு பெரிதாக வரவில்லை என கமெண்ட்கள் வந்தன. ஆனால் ஒரு சாரார் முதல் படம் என்பதால் அப்படிதான் இருக்கும் என ஆதரவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் அந்த படப்பிடிப்பின் போது நடந்த ஒரு சுவாரஸ்யமான தகவலை ரங்கராஜ் பாண்டே பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் ‘நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பின் போது எனக்கு நடிப்பு வராமல் நான் பல காட்சிகளில் ரீ டேக் வாங்கினேன். அப்போது தல வந்து என்னிடம் நீங்கள் நன்றாகதான் நடிக்கிறீர்கள் என தட்டிக்கொடுத்தார். அதன் பின்னர் தலயே சொல்லிட்டாரு…. செஞ்சிடுவோம் என நான் தைரியமாக நடித்தேன் ‘ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்