சொந்தக் காசில் கட் அவுட் வைத்துக் கொண்டாரா ரம்யா பாண்டியன்!

வியாழன், 11 பிப்ரவரி 2021 (16:46 IST)
நடிகை ரம்யா பாண்டியன் நிகழ்ச்சி ஒன்றுக்காக தனக்கு தானே கட் அவுட் எல்லாம் வைத்து பாலாபிஷேகம் செய்து கொண்டதாக ட்ரோல்கள் வெளியாகியுள்ளன.

ஜோக்கர் படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானாலும் போதுமான வாய்ப்புகள் கிடைக்காததால் சமூகவலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் ரம்யா பாண்டியன். அதில் ரசிகர்கள் கிறங்கி போக பார்த்த விஜய் டிவி தங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவரை தூக்கி போட்டு விஜய் டிவியின் செட் பிராப்பர்ட்டியாக்கியது.

இதையடுத்து அவர் பிக்பாஸ் சீசன் 4 ல் போட்டியாளராக கலந்துகொண்டார். ஆனாலும் அவருக்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் இப்போது பிக்பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவருடைய கட் அவுட் மற்றும் பேனர்களுக்கு எல்லாம் ரசிகர்கள் பால் ஊற்றுவது போன்ற காட்சிகள் எல்லாம் ஒளிபரப்பப் பட்டன.

ஆனால் அந்த பேனர் எல்லாம் ரம்யா பாண்டியன் தானே காசு செலவு பண்ணி வைத்துக் கொண்டது என இப்போது அவரை சமூகவலைதளங்களில் ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்