நற்றுணையாவது நமச்சிவாயமே… தனுஷ் 55 படம் குறித்து அப்டேட் கொடுத்த ராஜ்குமார் பெரியசாமி!

vinoth

வியாழன், 27 பிப்ரவரி 2025 (09:39 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவனத் தயாரிப்பில் வெளியான அமரன் திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய கமர்ஷியல் வெற்றியைப் பெற்று 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்த வெற்றி ராஜ்குமார் பெரியசாமியைக் கவனிக்க வைக்கும் இயக்குனராக்கியுள்ளது.

இதையடுத்து அவர் தனுஷ் நடிப்பில் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் மதுரை அன்பு செல்வன் தயாரிக்கவுள்ளார். படப்பிடிப்பு வேலைகள் விரைவில் தொடங்கும் எனவும், மற்ற நடிகர் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று சிவராத்திரியை முன்னிட்டு ராஜ்குமார் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் “இந்த மகாசிவராத்திரி நன்னாளில், சிவபெருமான் நமக்கு அமைதி, நேர்மறை எண்ணம், செல்வம் மற்றும் ஆசிர்வாதத்தை அளிப்பார். தனுஷ் 55. நற்றுணையாவதும் நமச்சிவாயமே” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்