ஆத்மா சாந்தி அடையட்டும்… கேவி ஆனந்த் மறைவுக்கு ரஜினி இரங்கல்!

வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (12:46 IST)
இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்த ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் கே வி ஆனந்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

பிரபல இயக்குனர் கே வி ஆனந்த் அவர்கள் இன்று காலை மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் அவருக்கு கொரோனா தொற்றுக் காரணமாகவே மாரடைப்பு ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. எப்படி ஆயினும் அவரின் மறைவு திரையுலகினருக்கு மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அவரின் மறைவு குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டரில் ‘aமதிப்பிற்குரிய கே.வி.ஆனந்த் அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்’ என அஞ்சலி செலுத்தியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்