இதுவரை தமிழ்ப் படங்கள் வெளியாகாத நாட்டில் ரிலீஸ் ஆகும் ரஜினியின் வேட்டையன்!

vinoth

வெள்ளி, 4 அக்டோபர் 2024 (07:27 IST)
ஜெயிலர் என்ற சூப்பர் ஹிட் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கிய வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர. அனிருத் இசையமைக்க, எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் டீசர் மற்றும் டிரைலர் ஆகியவை வெளியாகிக் கவனம் ஈர்த்துள்ளன.

படம் பற்றி பேசியுள்ள இயக்குனர் ஞானவேல் “படத்தில் ரஜினிகாந்த் என்கவுண்ட்டர் போலீஸாக நடிப்பது உண்மைதான். அவர் ஏன் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக மாறினார், அதற்கான காரணம் என்ன என்பதைப் படத்தில் காட்டியுள்ளோம்” எனப் பேசியுள்ளார்.  இதற்கிடையில் டிரைலர் வெளியானதில் இருந்து படம் என்கவுண்ட்டருக்கு ஆதரவானக் கருத்தைப் பேசுகிறதோ என்ற விவாதம் எழுந்துள்ளது. இது சம்மந்தமாக படத்துக்கு தடை விதிக்க சொல்லி  வழக்கு ஒன்றும் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தொடரப்பட்டுள்ளது. ஆனால் நீதிமன்றம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் படத்தின் ரிலீஸ் வேலைகள் விருவிருப்பாக நடந்து வருகிறது. இதுவரை தமிழ்ப் படங்கள் பெரிதாக ரிலீஸ் ஆகாத தென்கொரியாவில் வேட்டையன் படம் ரிலீஸாகவுள்ளது. அந்நாட்டின் தலைநகர் சியோலில் சில திரைகளில் வேட்டையன் படம் ரிலீஸாகவுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்