ரஜினி, விஜய் படங்களின் ஷூட்டிங் தொடங்கியது

வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (12:12 IST)
வேலை நிறுத்தத்தால் ஒத்தி வைக்கப்பட்டிருந்த ரஜினி, விஜய் படங்களின் ஷூட்டிங், மீண்டும் தொடங்கியது.

 
 
‘யாருடன் வேண்டுமானாலும் பணிபுரியலாம்’ என்ற தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலின் உத்தரவை எதிர்த்து, வேலை  நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டது பெப்சி. சில நாட்களாக நடந்துவந்த இந்த வேலை நிறுத்தப் போராட்டம், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வாபஸ் பெறப்பட்டது. எனவே, ஒத்தி வைக்கப்பட்டிருந்த ஷூட்டிங் அனைத்தும், மறுபடியும் நடைபெற  ஆரம்பித்துள்ளன.
 
‘காலா’ படத்தின் ஷூட்டிங், மும்பையில் தொடங்கியுள்ளது. சில முக்கியமான காட்சிகளை அங்கு படம்பிடிக்கின்றனர். விஜய்  நடித்துள்ள ‘மெர்சல்’ படத்தின் பேட்ச் ஒர்க் காட்சிகள், நேற்று ஓஎம்ஆரில் உள்ள ஒரு ஐடி பார்க்கில் நேற்று  தொடங்கியிருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்