விக்ரம் பிரபு தயாரித்து நடிக்கும் படம் நெருப்புடா

வியாழன், 7 ஜூலை 2016 (10:22 IST)
விக்ரம் பிரபு நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். தற்போது ஃபர்ஸ்ட் ஆர்டிஸ்ட் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.


 


இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக 'நெருப்புடா' படத்தைத் தயாரிக்கிறார். தயாரிப்பு மட்டுமல்லாமல் நடிக்கவும் செய்கிறார். விக்ரம் பிரபு தயாரித்து நடிக்க இருக்கும் புதுப் படத்துக்கு 'நெருப்புடா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
 
'கபாலி' படத்தின் பாடல் வரிகளான நெருப்புடா வரியையே படத்துக்கு தலைப்பாக வைத்துள்ளனர். 'நெருப்புடா' படத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கிறார். 
 
அறிமுக இயக்குநர் அசோக் குமார் இப்படத்தை இயக்குகிறார். விக்ரம் பிரபுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடிக்கிறார். 'நான் கடவுள்' ராஜேந்திரன், 'ஆடுகளம்' நரேன், பொன்வண்ணன், மதுசூதன் ராப், நாகிநீடு ஆகியோரும் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.
 
ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜேசேகர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ரோகேஷ் பாடல்களை எழுதுகிறார். தீயணைப்பு வீரர் கதாபாத்திரத்தில் நடிக்கும் விக்ரம் பிரபு, ரஜினியின் தீவிர ரசிகராக நடிப்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் படப்படிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்