500 கோடி ரூபாய் கலெக்‌ஷனை எட்டிய பிரபாஸின் சலார்!

வியாழன், 28 டிசம்பர் 2023 (14:22 IST)
பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் நடித்துள்ள சலார் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதற்கு முக்கியக் காரணம் இந்த படத்தை இயக்குவது கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் என்பதுதான்.  இந்த படத்தை கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரித்துள்ளார். கே ஜி எஃப் இசையமைபபாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார்.

கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு நேற்று இந்த படம் ரிலீஸ் ஆனது. பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு படங்களுக்குப் பின்னர் பிரபாஸ் நடித்த அனைத்து படங்களும் ரசிகர்களை திருப்திப் படுத்தாததால் இந்த படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு, இந்தியா முழுவதும் அதிக அளவிலான திரைகளில் ரிலீஸ் ஆனது.

முதல்நாளில் 178 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த இந்த படம் இந்த ஆண்டில் முதல் நாளில் அதிகமாக வசூலித்த படம் என்ற சாதனையை படைத்தது. ஆனால் முதல் நாளிலேயே நெகட்டிவ் விமர்சனங்கள் எழுந்ததை அடுத்தடுத்த நாட்களில் வசூல் படிப்படியாக குறைந்தது. இந்நிலையில் இப்போது படம் ரிலீஸாகி 6 நாட்கள் ஆகியுள்ள நிலையில் உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்