பிரபல சுமங்கலி சீரியல் நடிகர் பிரதீப் தற்கொலை!

புதன், 3 மே 2017 (13:39 IST)
முன்னணி தமிழ் சேனல் ஒன்றில் ஒளிப்பரப்பாகி வந்த சுமங்கலி தொடரில் முதன்மை ரோலில் நடித்து வந்த நடிகர் பிரதீப் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நடிகர் பிரதீப் ஐதராபாத்தில் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை.  இதனை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

 
 
இது குறித்து உடன் நடிக்கும் சுமங்கலி தொடர் நடிகர்களின் வட்டாரத்தில் விசாரித்தபோது, அவர்களே இந்த விஷயத்தை கேட்டு  அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சீரியலில் நன்றாகத்தான் நடித்து கொண்டிருந்தார். என்ன பிரச்சனை என்பது எங்களுக்கும்  தெரியவில்லை. இந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.
 
கணவன் மனைவிக்கு இடையேயான பாசத்தை கூறும் சுமங்கலி சீரியலில் பிரபல நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர். இது  நண்பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்