ஜனவரி 6 ஆம் தேதி பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தொடக்கம்!

சனி, 2 ஜனவரி 2021 (13:47 IST)
ஜனவரி 6 ஆம் தேதி பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத் மற்றும் இலங்கை ஆகிய இடங்களில் நடத்த மணிரத்னம் திட்டமிட்டுள்ளார். ஆனால் சில பல காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.

இதையடுத்து படப்பிடிப்புக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின் ஐதராபாத்தில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்த உள்ளார் மணிரத்னம். ஜனவரி 6 ஆம் தேதி அனைத்து நடிகர்களையும் ஒருங்கிணைத்து நடக்கும் படப்பிடிப்பில் பெருவாரியான படப்பிடிப்புகளை எடுத்து முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்