பொன்னியின் செல்வன் -2 திரைப்படம் ரூ.300 கோடி வசூல்!

திங்கள், 8 மே 2023 (22:04 IST)
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட பலர் நடித்து வெளியாகியுள்ள படம் ‘பொன்னியின் செல்வன்’.

கல்கி எழுதிய வரலாற்று புதினமான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை தழுவி இரண்டு பாகமாக உருவாக்கப்பட்ட இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி, ரூ 400 கோடி வசூலித்தது.

இப்படம்  தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல்லாக இருக்கும் நிலையில், பொன்னியின் செல்வன் 2 படம்  ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியானது.

இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்த சூழலில் பல பகுதிகளில் ஹவுஸ் புல் காட்சிகளுடன் ஓடி வருகிறது.

சினிமா விமர்சகர்கள், ரசிகர்கள் எனப் பலரும் இப்படத்தைப் புகழ்ந்து, பாராட்டி வரும் நிலையில், இப்படம்  இன்றுவரை உலகம் முழுவதும் ரூ.300 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் லைகா அதிகாரப்பூர்வமாக  தெரிவித்துள்ளது.

இதனால், படக்குழு மகிழ்ச்சியடைந்துள்ளனர். விரைவில் முதல் பாகத்தின் வசூல் சாதனையை முறியடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#PS2 continues conquering the box office worldwide with a 300 crore+ collection!

Book your tickets now

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்