ஓடிடியிலும் 100 ஆவது நாளா? சூர்யாவைக் கிண்டல் செய்யும் ரசிகர்கள்!

வியாழன், 10 செப்டம்பர் 2020 (16:59 IST)
நடிகை ஜோதிகா நடிப்பில் ஓடிடியில் வெளியான பொன்மகள் வந்தாள் திரைப்படம் 100 ஆவது நாளைக் கடந்துள்ளதாக போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.

ஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிப்பில் ஜெஜெ பெடரிக் இயக்கிய ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் இன்று முதல் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு தற்போது கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. குறிப்பாக ஜோதிகா மற்றும் பார்த்திபன் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த படம் மே 29 ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புக்கும் சர்ச்சைகளுக்கும் இடையே வெளியான இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது.

இந்நிலையில் இப்போது இந்த படம் ரிலிஸாகி 100 நாட்களைக் கடந்துள்ளதாக போஸ்டர்கள் உருவாக்கப்பட்டு சமூகவலைதளங்களில் பரவ ஆரம்பித்துள்ளன. தியேட்டர்களில் ரிலீஸானாதால் இதுபோல போஸ்டர்கள் வெளியிடுவது வழக்கம். ஓடிடி ரிலிஸுக்கே இப்படியே,… அதுவும் ரசிகர்களை ஏமாற்றிய படத்துக்கே 100 நாள் போஸ்டரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்