கச்சா எண்ணெய் விலை உயர்ந்தும் உயராத பெட்ரோல், டீசல் விலை!

வெள்ளி, 28 ஜனவரி 2022 (07:30 IST)
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தும் இந்தியாவில் கடந்த எண்பத்தி ஒன்பது நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்தியாவில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெறும் போதும், ஒரு சில மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் போதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராத நிலை இருந்து வருகிறது என்பதை கடந்த பல ஆண்டுகளாக பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் தற்போது உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43எனவும் விற்பனையாகி வருகிறது 
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்