புறம்போக்கு இரண்டு வருடங்களுக்கு முன் வந்திருந்தால்.... ஜனநாதனிடம் பேசிய பேரறிவாளன்

வியாழன், 16 ஜூலை 2015 (20:33 IST)
புறம்போக்கு படத்தில் மரண தண்டனைக்கு எதிரான கருத்துகளை வைத்திருந்தார் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன். மரண தண்டனை தேவையா என்ற கேள்வியை இப்படம் எழுப்பியது.
 
இந்நிலையில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும், ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளனை ஜனநாதன் சிறையில் சென்று சந்தித்தார். 
 
இந்த சந்திப்புக்குப் பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய ஜனநாதன், பேரறிவாளனை இன்று நான் சந்தித்து பேசினேன். அப்போது அவர் என்னிடம், புறம்போக்கு படம் மரண தண்டனை நியாயமானது என்று இதுவரை நினைத்திருந்த பலரது மனநிலையை மாற்றி இருக்கிறது. 2 வருடத்துக்கு முன்பு இந்த படம் வந்திருந்தால் எனக்கு உதவியாக இருந்திருக்கும் என்று தெரிவித்ததாக கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்