இந்த சந்திப்புக்குப் பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய ஜனநாதன், பேரறிவாளனை இன்று நான் சந்தித்து பேசினேன். அப்போது அவர் என்னிடம், புறம்போக்கு படம் மரண தண்டனை நியாயமானது என்று இதுவரை நினைத்திருந்த பலரது மனநிலையை மாற்றி இருக்கிறது. 2 வருடத்துக்கு முன்பு இந்த படம் வந்திருந்தால் எனக்கு உதவியாக இருந்திருக்கும் என்று தெரிவித்ததாக கூறினார்.