காது கிழியுற அளவுக்கு கெட்ட வார்த்த பேசுறாங்க: சின்மயியின் உருக்கமான டிவீட்

சனி, 24 நவம்பர் 2018 (09:00 IST)
வைரமுத்து மீது மீடூ புகார் கூறிய சின்மயி தனது டிவிட்டர் பக்கத்தில் உருக்கமான டுவீட்டை போட்டுள்ளார்.
 
பிரபல பின்னணி பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இந்த குற்றச்சாட்டுக்கு வைரமுத்து மறுப்பு தெரிவித்திருந்தார். சின்மயிக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
 
சமீபத்தில் சின்மயி டப்பிங் யூனியனிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
 
இந்நிலையில் சின்மயி தனது டிவிட்டர் பக்கத்தில் உண்மையை வெளியே கூறியதால் தனக்கு வரும் ஆபாச மெசேஜ்களை வெளியிட்டுள்ளார். இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்