நல்லா இருக்கய்யா .. பாசம் தழுவும் குரலில் பேசிய பரவை முனியம்மா ! வீடியோ வெளியீடு

வெள்ளி, 1 நவம்பர் 2019 (19:23 IST)
’’ஏ சிங்கம் போல நடந்து வர்றான்..’’என்ற பாடலை அவ்வளவு எளிதில்  யாராலும் மறந்துவிட முடியாது. வித்தியாசாகரின் இசையில் ஒரு கிராமியக் கலைஞர், பாடகர் அப்பாடலின் வழியே தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். எழுதப்படிக்கத், தெரியாத அவர் யாரேனும்  சொல்லிக்கொடுத்தால் கற்பூரம் மாதிரி பிடித்துக்கொள்வார்.
இப்படித்தான் அவர் பலநூறு பாடல்களைப் பாடி தமிழர்களின் நெஞ்சில் இடம்பிடித்தார்.
 
இந்நிலையில் சமீபத்தில் பரவை முனியம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்ற ஒரு தகவல் மீடியாக்களில் கவனம் பெற்றது. இந்நிலையில் இன்று அவர் மறைந்துவிட்டதாக ஒரு பொய்யான தகவல் பரப்பட்டது.
 
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில், இன்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில், ''எனக்கு உடல் நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.எனக்கு இப்போது ரத்தம் ஏற்றுகிறார்கள். நான் நன்றாக இருக்கிறேன் ''என தெரிவித்துள்ளார்.
 
மேலும். பாடகர் பரவை முனியம்மா வேலம்மாள் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுவார் என்பதை தமிழக முதல்வரே ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்