‘கொம்பன்’ படத்துக்குப் பிறகு வெற்றியைத் தராததால், இந்தப் படத்தில் அதை அடைந்துவிட வேண்டும் எனத் தீவிரமாக உழைத்துள்ளார் கார்த்தி. எனவே, போஸ்ட் புரொடக்ஷன் பணிகளிலும் அதிக கவனம் செலுத்துகிறார். இதனால், திட்டமிட்டபடி போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெறாமல் இழுத்துக்கொண்டே போகிறது. இதனால், பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்க இருக்கும் படத்தின் படப்பிடிப்பும் தள்ளிக்கொண்டே போகிறது.