கார்த்திக்காக காத்திருக்கும் பாண்டிராஜ்

வெள்ளி, 21 ஜூலை 2017 (18:38 IST)
திட்டமிட்டபடி கார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ பட வேலைகள் முடியாததால், அடுத்த படத்தை இயக்கவிருக்கும் பாண்டிராஜ் காத்துக் கொண்டுள்ளார்.


 

 
‘சதுரங்க வேட்டை’ வினோத் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. கார்த்தி படங்களுக்கு தெலுங்கிலும் மிகப்பெரிய மார்க்கெட் இருப்பதால், தெலுங்கில் முன்னணி ஹீரோயினான ரகுல் ப்ரீத்சிங்கை இந்தப் படத்தில் ஹீரோயினாக்கியுள்ளனர். ஜெய்சல்மார், பூஜ் மற்றும் சென்னைப் பகுதிகளில் நடைபெற்று வந்த ஷூட்டிங், சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது.

‘கொம்பன்’ படத்துக்குப் பிறகு வெற்றியைத் தராததால், இந்தப் படத்தில் அதை அடைந்துவிட வேண்டும் எனத் தீவிரமாக உழைத்துள்ளார் கார்த்தி. எனவே, போஸ்ட் புரொடக்ஷன் பணிகளிலும் அதிக கவனம் செலுத்துகிறார். இதனால், திட்டமிட்டபடி போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெறாமல் இழுத்துக்கொண்டே போகிறது. இதனால், பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்க இருக்கும் படத்தின் படப்பிடிப்பும் தள்ளிக்கொண்டே போகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்