தன்னுடைய அடுத்த படம் பற்றி அறிவித்த இயக்குனர் பா ரஞ்சித்!

vinoth

வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (17:13 IST)
பா ரஞ்சித் இயக்கத்தில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த ‘தங்கலான்’ படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில் முதல் நாளில் தமிழ் நாட்டில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் ஆதரவு கிடைத்தது. ஆனால் அதே நாளில் வெளியான டிமாண்டி காலணி படமும் சூப்பர் ஹிட் ஆனதால் தங்கலான் வசூல் இரண்டாவது வாரத்தில் குறைந்ததாக சொல்லப்படுகிறது.

இன்று தமிழில் வாழை, கொட்டுக்காளி மற்றும் போகுமிடம் வெகுதூரமில்லை ஆகிய மூன்று படங்கள் ரிலீஸாகியுள்ள நிலையில் தங்கலான் ஓடும் தியேட்டர் எண்ணிக்கை பெரியளவில் குறைந்தது. மாறாக தெலுங்கில் தங்கலான் படத்துக்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருகிறது. முதல் வாரத்தில் 250 தியேட்டர்களில் மட்டும் ஓடிய தங்கலான் தெலுங்கு பதிப்பு இரண்டாவது வாரத்தில் 391 திரையரங்குகளில் ஓடுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் இயக்குனர் பா ரஞ்சித் தனது அடுத்த படம் பற்றி பேசியுள்ளார். அதில் “என்னுடைய அடுத்த படத்தில் தினேஷ் ஹீரோவாக நடிக்கவுள்ளார். அந்த படம் பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்