சிவா- சூர்யா பட தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர் பா ரஞ்சித்!

புதன், 24 ஆகஸ்ட் 2022 (15:04 IST)
இயக்குனர் சிவா இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

பல ஆண்டுகளுக்கு முன்பே இயக்குனர் சிவா –சூர்யா கூட்டணியில் ஒரு படத்துக்கான பேச்சுவார்த்தைத் தொடங்கியது. ஆனால் சிறுத்தை சிவாவுக்கு அப்போது அஜித்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அந்த படம் தள்ளிப்போனது. அதன் பின்னர் 8 ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் இணைய வாய்ப்பே கிடைக்கவில்லை. இந்நிலையில் இப்போது அண்ணாத்த படத்தை முடிந்துள்ள நிலையில் சிறுத்தை சிவா சூர்யா நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.

சென்னையில் ஆகஸ்ட் 21 ஆம் தேதி பூஜை நடந்தது. இதையடுத்து இன்று படப்பிடிப்பு தொடங்கியது. இந்த நிகழ்வில் இயக்குனர் பா ரஞ்சித் கலந்துகொண்டார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்