ஆர்யன்கானின் பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க உத்தரவு

புதன், 13 ஜூலை 2022 (18:37 IST)
ஷாருக்கான் மகன் ஆர்யன் கானின் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
போதைப்பொருள் வழக்கில் ஆர்யன்கானின் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் அந்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளதால் அவருடைய பாஸ்போர்ட்டை ஒப்படைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 
 
ஆர்யன்கான் குற்றவாளி அல்ல என போதை பொருள் தடுப்பு பிரிவு ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் பாஸ்போர்ட்டை மற்றும் திரும்ப ஒப்படைக்காதது ஏன் என்ற கேள்வியையும் நீதிமன்றம் எழுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது3
 
 இதனை அடுத்து இன்னும் ஓரிரு நாளில் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் பாஸ்போர்ட் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்