ஒரே படத்தில் உச்சிக்குப் போன நடிகை

வெள்ளி, 13 அக்டோபர் 2017 (10:02 IST)
‘அர்ஜுன் ரெட்டி’ என்ற ஒரே படத்தின் மூலம் புகழின் உச்சிக்குச் சென்றிருக்கிறார் ஷாலினி பாண்டே.

 
 
‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ஷாலினி பாண்டே. இதுதான் அவருக்கு முதல் படம். அறிமுகமான  படத்திலேயே 19 லிப் லாக் காட்சிகளில் நடித்து ரசிகர்களைக் கிறங்கடித்திருக்கிறார் இவர். இந்த ஒரு படம், அவரை உச்சத்திற்கு  கொண்டு சென்றுள்ளது.
 
தற்போது ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ‘100% காதல்’ படத்தில் நடிக்கிறார் ஷாலினி. “சொந்த ஊர் ஜபல்பூர். நிறைய படிக்க  வேண்டும், விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்பதுதான் கனவு. ஆனால், நண்பர்கள்தான் அழகாக இருப்பதாகச் சொல்லி நாடகத்தில் நடிக்க வைத்தனர். அதன்மூலம் சினிமாவுக்கு வருவேன் என நினைத்து கூடப் பார்க்கவில்லை. முதல் படமே  மிகப்பெரிய ஹிட்டாகியிருப்பது மகிழ்ச்சி” என்கிறார் ஷாலினி பாண்டே.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்