38 நாட்கள் நடந்த நிவின் பாலியின் ஏழு மலை ஏழு கடல் படத்தின் டப்பிங் பணிகள்!

செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (08:28 IST)
இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி மற்றும் அஞ்சலி ஆகியோர் நடிப்பில் ஏழு மலை ஏழு கடல் என்ற படம் உருவாகி வருகிறது.

இயக்குனர் ராம் இப்போது நிவின் பாலி நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சூரி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் ராமேஸ்வரத்திலும் படப்பிடிப்பு நடந்து முடிந்தது.

இந்த படத்தில் விலங்குகள் அதிகளவில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. படம் முழுவதும் விலங்குகள் ஒரு கதாபாத்திரம் போலவே வரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதாம். படத்தின் டைட்டில் ஏழுகடல் ஏழுமலை என்று அறிவிக்கப்பட்டு கதாபாத்திரங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. நிவின் பாலி தன் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்காக 38 நாட்கள் டப்பிங் பேசியுள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிகளிலும் அவரே டப்பிங் பேசியுள்ளதாக சொல்லப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்