'பொன்னியின் செல்வன்' பட புதிய அப்டேட்

சனி, 18 செப்டம்பர் 2021 (18:56 IST)
மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிக் கட்டத்தை எட்டி வருகிறது. இரு பாகங்களாக உருவாகும் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா. பிரகாஷ்ராஜ். ஜெயராம். சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தின் ராமோஜி ராவ் பிலிம் ஸ்டுடியோவில் நடந்து வந்த நிலையில் இப்படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளன.

இதுகுறித்து பொன்னியின் செல்வன் படத் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளதாவது: பொன்னியின் செல்வன்  1 படப்பிடிப்பு நிறைவடைந்தது. இப்படம் அடுத்த ஆண்டு கோடைகாலத்தில் திரைக்கு வரும் எனத் தெரிவித்துள்ளது.

மேலும்,  இப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ளதால் பாகுபலி படத்திற்கு சமமாக இப்படமும் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்