விஜய் டிவி சீரியலில் புதிய நடிகை

வியாழன், 17 ஜூன் 2021 (17:02 IST)
பிரபல விஜய் தொலைக்காட்சியில் தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பாவம் கணேசன் சீரியலில் நடிகை பிரியங்கா நடிக்கவுள்ளார்.
 

பிரபல விஜய் தொலைக்காட்சியில் தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பாவம் கணேசன் சீரியல். மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இத்தொடருக்கு ரசிகர்கள் அதிகம்.

எனவே  இத்தொடரில் சுந்தரி நீயும் சுந்தரி நானும் என்ற சீரியலில் நடித்து மக்களின் மனதைக் கவர்ந்துள்ள நடிகை பிரியங்கா புதிதாக இணைந்துள்ளார்.

இத்தகவலை நடிகை பிரியங்கா தனது  சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்