எவ்வளவு கோடி கொடுத்தாலும் அந்த உடை அணிந்து நடிக்கமாட்டேன்: நயன்தாரா!!

ஞாயிறு, 12 நவம்பர் 2017 (16:39 IST)
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார். அதோடு இளம் நடிகர் இணைந்து நடிக்க விரும்பும் நடிகையாக உள்ளார்.


 
 
தற்போது அவர் நடிப்பில் வெளியான அறம் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நயன்தாரா ரசிகர்களுடன் இணைந்து படத்தை பார்த்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
 
அடுத்து அவர் நடிப்பில் வேலைக்காரன், இமைக்கா நொடிகள் ஆகிய படங்கள் வெளியாகயுள்ளன. இந்நிலையில் இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாரா போலீஸாக நடித்துள்ளாராம்.   
 
ஆனால், படத்தில் ஒரு காட்சியில் கூட நயன்தாரா காக்கி சட்டௌ அணிந்து நடிக்கவில்லையாம். மேலும் எத்தனை கோடி கொடுத்தாலும் காக்கி சட்டை அணிந்து நடிக்க மாட்டேன் என்று நயன்தாரா கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்