இரட்டைக் குழந்தைகளுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய விக்னேஷ் - நயன்தாரா தம்பதி!

ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2023 (14:13 IST)
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது கணவர் மற்றும் இரட்டை குழந்தைகளுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 
 
இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது இரட்டை குழந்தைகளான உயிர் மற்றும் உலகம் ஆகியோர்கள் முதல் ஓணம் பண்டிகையை கொண்டாடுகிறார்கள் என்று மகிழ்ச்சியுடன் கூறி இது குறித்து புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார். 
 
மேலும் நயன்தாராவுடன் ரொமான்ஸ் ஆக இருக்கும் புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன  
 
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்  கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு  வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்தது என்பதும் இந்த குழந்தைகளுக்கு உயிர் மற்றும் உலகம் என்று பெயர் வைத்தனர் என்பதும் தெரிந்ததே.
 
Edited by Siva
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்