நயன்தாரா நடித்த கொலையுதிர்காலத்தை தயாரிக்கும் இந்திப்பட நிறுவனம்!

சனி, 1 ஏப்ரல் 2017 (10:42 IST)
நயன்தாரா நடிப்பில் கொலையுதிர்காலம் என்ற படத்தை இயக்கி வருகிறார் சக்ரி டோல்டி. இதன் இந்தி ரீமேக்கில் தமன்னா நாயகியாக நடிக்கிறார். 23 ஆண்டுகளாக தயாரிப்பு துறையில் உள்ள பூஜா எண்டர்டைன்மெண்ட் அண்ட் பிலிம் லிமிடெட் நிறுவனம் கொலையுதிர்காலம் மூலம் தென்னிந்தியாவில் கால் பதிக்கிறது. இந்நிறுவனம் இந்தி, மராத்தி, பஞ்சாபி ஆகிய  மொழிகளில் இதுவரை 31 படங்கள் தயாரித்துள்ளது.

 
பாலிவுட் சூப்பர் ஸ்டார்களான அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான்கான் உள்பட பாலிவுட்டின் முன்னணி நடிகர்களை வைத்து  படங்கள் தயாரித்துள்ள இந்நிறுவனம், முதன்முறையாக நயன்தாரா நடிக்கும்கொலையுதிர்காலம் படத்தால் எண்ட்ரி கொடுத்துள்ளது. இதையடுத்து தமிழ், மலையாளத்திலும் தொடர்ந்து படங்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்