லாக்டவுனில் 50 கோடி சம்பாதித்த நயன்தாரா!

செவ்வாய், 22 ஜூன் 2021 (16:28 IST)
நடிகை நயன்தாரா சமீபகாலமாக மட்டும் 8க்கும் மேற்பட்ட புதிய படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

நடிகை நயன்தாரா கதாநாயகி பாதித்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள நடிக்க ஆரம்பித்தது மாயா படத்தின் வெற்றிக்குப் பின்னர்தான். அந்த படத்துக்குப் பின்னர் அறம் உள்ளிட்ட பல்வேறு படங்கள் வெளியாகி வெற்றி பெற்றதை அடுத்து அவர் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருகிறார். லாக்டவுனுக்கு முன்னர் செலக்ட்டிவ்வாக படங்களை தயாரித்து வந்த நயன்தாரா இப்போது வரிசையாக படங்களில் கமிட்டாகி வருகிறார்.

இந்த லாக்டவுன் சமயத்தில் மட்டும் 8க்கும் மேற்பட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாகவும், அதன் மூலம் 50 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்