இதை நீங்கள் தமிழ்ப் படமாகவே பார்க்கலாம்… மம்மூட்டி கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!

புதன், 18 ஜனவரி 2023 (14:51 IST)
மலையாள சினிமாவில் தற்போது இருக்கும் முக்கியமான இயக்குனர்களில் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரியும் ஒருவர். அவர் இயக்கிய அங்கமாலி டைரிஸ், ஈ மா வு மற்றும் ஜல்லிக்கட்டு ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றவை. ஜல்லிக்கட்டு இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில் அவர் அடுத்து தமிழ் மற்றும் மலையாளத்தில் இயக்கும் திரைப்படத்தில் கதாநாயகனாக மம்மூட்டி நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்துக்கு தமிழ் தலைப்பாக நண்பகல் நேரத்து மயக்கம் என வைக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு பழனி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஜனவரி 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படம் பற்றி சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் பேசிய போது “இந்த படமே தமிழ்நாட்டின் பழனியில் நடக்கும் கதைதான். படத்தின் பெரும்பாலான வசனங்கள் தமிழில்தான் இருக்கும். அதனால் இதை தமிழ் படமாகவே நீங்கள் கருதி பார்க்கலாம்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்