ஏப்ரல் 25 ஆம் தேதி மோகன்லால், ஷோபனா உள்ளிட்டோர் நடிப்பில் தருண்மூர்த்தி இயக்கத்தில் உருவான துடரும் படம் ரிலிஸானது. இந்த படத்துக்குப் பெரிய அளவில் எந்த விளம்பரமும் செய்யவில்லை. ஆனாலும் முதல் நாள் முதல் காட்சிக்குப் பிறகு படம் பார்த்த ரசிகர்களின் விமர்சனங்கள் மூலம் படம் பிக்கப் ஆனது. அதன் காரணமாகக் கேரளாவைத் தாண்டியும் தமிழ்நாட்டிலும் இந்த படத்துக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. இந்த படம் திரையரங்கு மூலமாக சுமார் 235 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தற்போது அவரின் ச்சோட்டா மும்பை என்ற படம் ரி ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படி அடுத்தடுத்து ஹிட்களைக் கொடுத்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் 2 மாதங்களில் சுமார் 500 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளார் மோகன்லால். இது மலையாள சினிமாவில் இதுவரை நிகழாத ஒரு சாதனை என்று அனைவராலும் பாராட்டப்படுகிறது.