நடிகை மீரா மிதுனுக்கு மீண்டும் பிடிவாரண்ட்… விரைவில் கைதாக வாய்ப்பு!

சனி, 6 ஆகஸ்ட் 2022 (15:49 IST)
தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான மீரா மிதுன் பட்டியல் வகுப்பை சேர்ந்தவர்களை இழிவாக பேசியதை அடுத்து அவர் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

நடிகை மீரா மிதுன் கடந்த ஆப்ட்ய்  மாதங்களுக்க முன்னர் பட்டியல் இனத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தகவல் வெளியானது. இது குறித்த வீடியோ வைரல் ஆன நிலையில் அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து திடீரென மீராமிதுன் தலைமறைவான நிலையில் அவரை பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்தனர். பின்னர் கேரளாவில் உள்ள ஆலப்புழா என்ற இடத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மீராமிதுன் தங்கியிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் வழக்கு விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் விசாரணைக்கு ஆஜராகாததை அடுத்து அவரை கைது செய்து பின்னர் நிபந்தனை ஜாமீன் வழங்கினர். இந்நிலையில் இப்போது மீண்டும் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகவில்லை என மீண்டும் அவருக்கும் அவரது வழக்கறிஞருக்கும் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்