வாத்தி கம்மிங்.. ஓடிடியில் வெளியாகிறது மாஸ்டர்?? – படக்குழு முடிவு என தகவல்!

சனி, 12 செப்டம்பர் 2020 (12:45 IST)
தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படாததால் “மாஸ்டர்” படத்தை ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொரோனா காரணமாக தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் திரைப்படங்கள் வெளியாகததால் பலர் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் தயாரிப்பாளர்கள் பலர் தங்கள் படங்களை ஓடிடி தளங்களுக்கு விற்க தொடங்கியுள்ளனர். விஜய் சேதுபதியின் க\பெ ரணசிங்கம், சூர்யாவின் சூரரை போற்று போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் ஓடிடிக்கு விற்கப்பட்டுள்ள நிலையில் தற்போது விஜய் நடித்து கிடப்பில் உள்ள “மாஸ்டர்” திரைப்படமும் ஓடிடிக்கு விற்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தாலும், திரையரங்க உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் இடையேயான பிரச்சினையாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்