பட்ஜெட் காரணமாக தனுஷ் மாரி செல்வராஜ் படம் கைவிடப்பட்டதா?

vinoth

புதன், 23 அக்டோபர் 2024 (09:15 IST)
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியான ‘வாழை’ இந்தாண்டின் மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இந்த படம் கிட்டத்தட்ட 40 கோடி ரூபாய் அளவுக்கு திரையரங்கு மூலமாகவே வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து அவர் துருவ் விக்ரம் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். அதன் பின்னர் அவர் தனுஷ் மற்றும் கார்த்தி ஆகியோருக்குக் கதை சொல்லியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தனுஷூக்காக அவர் சொன்ன கதை அதிக பட்ஜெட் காரணமாக கைவிடப்பட்டதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

ஆனால் அதே கதையைதான் சில மாற்றங்கள் செய்து அவர் கார்த்திக்கு சொல்லி, அதை அடுத்து படமாக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்