துருவ் விக்ரம்& மாரி செல்வராஜ் கூட்டணி இப்போது இல்லையா?

சனி, 12 ஜூன் 2021 (15:03 IST)
துருவ் விக்ரம் மற்றும் மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாக இருந்த திரைப்படம் இப்போதைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

மாரி செல்வராஜ் இயக்கிய பரியெறும் பெருமாள் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை அடுத்து அவர் இப்போது தனுஷை வைத்து கர்ணன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இப்போது பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து அவர் தன் முதல்பட தயாரிப்பாளர் பா ரஞ்சித் தயாரிப்பில் துருவ் விக்ரம்மை கதாநாயகனாக ஒரு படம் இயக்க உள்ளார் என்று அறிவிப்புகள் வெளியாகின. மேலும் அந்த கதை கபடியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது என சொல்லப்பட்டது.

ஆனால் கர்ணன் படத்தின் வெற்றிக்குப் பின்னர் மீண்டும் தனுஷ் கூட்டணியில் மாரி செல்வராஜ் ஒரு படத்தை இயக்க உள்ளாராம். இந்த படத்தை முடித்த பின்னரே அவர் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குவார் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்