'மாமன்னன்'' 50 வது நாளில் அடியெடுத்து வைக்கிறது- உதயநிதி டுவீட்

வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (17:33 IST)
#மாமன்னன் திரைப்படத்தின் வெற்றியை சாத்தியமாக்கிய உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு என் அன்பும், நன்றியும்’’ என்று அமைச்சர்   உதயநிதி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில்,  உதயநிதி, வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  நடிப்பில் கடந்த ஜூலை 29 ஆம் தேதி தியேட்டரில் வெளியான படம் மாமன்னன்.

இத்திரைப்படம் வெளியாகி  ரசிகர்களின் வரவேற்பை பெற்று, வசூலிலும் ரூ 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாக படக்குழுவினரே அறிவித்தனர்.

இப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஒரு மாதம் கழித்து சமீபத்தில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி இதிலும்  நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படம் வெளியாகி இன்று  50  வது நாளில் அடியெடுத்து வைக்கிறது.

இதுபற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன் டுவிட்டர் பக்கத்தில்,

‘’மாமன்னன்  திரைப்படம்  வெற்றிகரமான  50 ஆவது நாளில் அடியெடுத்து வைக்கிறது. சமூகநீதி - சமத்துவ அரசியலை பேசிய #மாமன்னன் திரைப்படத்தின் வெற்றியை சாத்தியமாக்கிய உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு என் அன்பும், நன்றியும்’’ என்று தெரிவித்துள்ளார்.

#MAAMANNAN திரைப்படம்
வெற்றிகரமான
50 ஆவது நாளில் அடியெடுத்து வைக்கிறது. சமூகநீதி - சமத்துவ அரசியலை பேசிய #மாமன்னன் திரைப்படத்தின் வெற்றியை சாத்தியமாக்கிய உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு என் அன்பும், நன்றியும்.

Celebrating 50 days of #Maamannan#MaamannanBlockusterpic.twitter.com/eliZRYu10r

— Udhay (@Udhaystalin) August 17, 2023

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்