மீண்டும் தமிழ்ப்படத்தில் மல்லிகா ஷெராவத்: டைட்டில் அறிவிப்பு!

செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (19:15 IST)
மீண்டும் தமிழ்ப்படத்தில் மல்லிகா ஷெராவத்: டைட்டில் அறிவிப்பு!
பிரபல பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் கமலஹாசன் 10 வேடங்களில் நடித்திருந்த தசாவதாரம் என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி சிம்பு நடித்திருந்த ’ஒஸ்தி’ என்ற திரைப் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது மல்லிகா ஷெராவத் மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பாம்பாட்டம் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது
 
இயக்குனர் வடிவுடையான் இயக்கி வரும் இந்தப் படத்தில் ஜீவன்ம் யாஷிகா ஆனந்த் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படப்பிடிப்பில் மல்லிகா ஷெராவத் கலந்து கொள்ள இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்