அடுத்த கட்டத்துக்கு செல்லும் இந்தியன் 2… நடந்த முக்கிய மாற்றம்!

சனி, 23 ஜூலை 2022 (15:22 IST)
இந்தியன் 2 திரைப்படத்தை மீண்டும் தொடங்குவதற்கான வேலைகள் இப்போது நடந்து வருகின்றன.

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் இன்னும் தொடங்கப்படவில்லை. படம் சம்மந்தமாக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இயக்குனர் ஷங்கருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. அதில் சுமூக முடிவு ஏற்பட்டு விட்ட நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து படத்தை மீண்டும் தொடங்குவதற்கான தயாரிப்பு வேலைகள் தொடங்கி நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அடுத்த மாதம் ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் மற்றொரு அதிகாரப்பூர்வமற்ற தகவல் சினிமா வட்டாரத்தில் பரவி வருகிறது. இந்த படத்தை லைகாவிடம் இருந்து கைப்பற்றி ரெட்ஜெய்ண்ட்ஸ் மூவிஸ் நிறுவனமே மீதிப்படத்தை தயாரித்து தங்கள் நிறுவனத்தின் பெயரில் ரிலீஸ் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இப்போது இந்தியன் 2 படத்துக்காக இயங்கிவந்த அலுவலகம் மாற்றப்பட்டுள்ளதாம். கிழக்குக் கடற்கரை சாலையில் இருந்த அலுவலகம் இப்போது வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்