போட்டியின்றி இயக்குனர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு - விருந்து வைத்து கொண்டாடிய லிங்குசாமி

செவ்வாய், 7 ஜூலை 2015 (14:11 IST)
இயக்குனர்கள் சங்கத்துக்கு இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். 2015 -17 -ஆம் ஆண்டுகளுக்கான நிர்வாகிகளை தேர்வு செய்ய இந்த மாதம் 5 -ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. 
 
இப்போது சங்கத் தலைவராக இருக்கும் விக்ரமன் உள்பட நிர்வாகிகள் அனைவரும் மீண்டும் அதே பதவிகளுக்கு போட்டியிட்டனர். அவர்களை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்யாததால் அனைவரும் போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர்.
 
செயற்குழு உறுப்பினர்கள் 11 பேரின் பதவிக்கு உதவி இயக்குனர்கள் புதிய அலை சார்பில் போட்டியிடுவதாக இருந்தனர். கடைசியில் அவர்கள் போட்டியிடவில்லை. அதனால் செயற்குழுவுக்கு போட்டியிட்ட விக்ரமன் அணியைச் சோந்த 11 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
 
இந்த வெற்றியை இயக்குனர்கள் சங்கத்தில் விருந்து வைத்து கொண்டாடினர். இந்த விருந்தின் அனைத்துச் செலவுகளையும் ஏற்றுக் கொண்டவர் லிங்குசாமி. அவர்தான் இந்த விருந்துக்கே ஏற்பாடு செய்தாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்