கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள ஜோக் அருவியில் லிங்காவின் படப்பிடிப்பு நடந்து வந்தது. கடந்த நான்கைந்து நாள்களாக மழை விடாது பெய்து வருகிறது. படப்பிடிப்புக்கு தேவையான சூரிய ஒளியும் கிடையாது. இந்த இக்கட்டான நிலையிலும் படப்பிடிப்பை நிறுத்தவில்லையாம் ரவிக்குமார். இதே வேகத்தில் போனால் இன்னும் பத்து தினங்களுக்குள் இந்த ஷெட்யூல்ட் முடிந்துவிடும்.